Thursday, October 5, 2017

இந்துசமயம்உருவானஇடம்_தமிழ்நாடு.

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :

1.சைவம்
2.வைணவம்
3.கெளமாரம்
4.காணாபத்தியம்
5.செளரம்
6.சாக்தம்
7.ஸ்மார்த்தம்

சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவன் கோவில்கள் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளன.

வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில்தான் உள்ளன.

கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

காணாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் உள்ளன.

செளரத்தில் சூரியனைத் தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்.

சாக்தத்தில் பராசக்தி, நவதுர்க்கை கோவில்கள், அம்மன் கோவில்கள், பெண் தெய்வங்களுக்குக் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

இந்து சமயத்தின் கிளை, இணை, துணை சமயங்களான சமணம், புத்தம்  உருவானதும் தமிழ்நாட்டில்தான்.

மேற்கண்ட ஏழு பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும் ஒட்டுமொத்த இந்துக்களான ஸ்மார்த்தர்கள் இருப்பதும்தமிழ்நாட்டில்தான்.

பதினெட்டு சித்தர்கள் தோன்றி வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்ததும் தமிழ்நாட்டில்தான்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றி வாழ்ந்து மறைந்ததும் தமிழ்நாட்டில்தான்.

பஞ்சபூத கோவில்களில் நிலம், நீர்,ஆகாயம், நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

பன்னிரண்டு ராசிகள் மற்றும்  27 நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்தான்.

சப்தவிடங்க ஸ்தலங்கள்  இருப்பது தமிழ்நாட்டில்தான்.

இந்துப் பண்பாட்டின் அடையாளமே தமிழ்நாடு தான்  !!!!!

இந்துப் பண்பாட்டின் வாழ்வியல் முறையே தமிழ்நாடு தான்  !!!!!

இந்துப் பண்பாட்டின் மருத்துவமான இயற்கை சித்த மூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான்  !!!!

இந்துப் பண்பாட்டின் இயற்கை வேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில்தான் !!

No comments: