Thursday, October 5, 2017

அற்புதமான வரிகள்

1) பணம்பணம்என்று
     அதன் பின்னால்          செல்லாதே...
வாழ்க்கை போய்   விடும்.வாழ்க்கையையும்ரசித்துக் கொண்டே  போ...!!

2)நேர்மையாகஇருந்து
 என்ன சாதித்தோம்
என்றுநினைக்காதே...
நேர்மையாகஇருப்பதே
ஒரு சாதனை தான்...!!

3) நேர்மையாக
     இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
 தெரிந்ததே,அதற்காக
நேர்மையை கை  விட்டு விடாதே...அந்த நேர்மையேஉன்னை
  காப்பாற்றும். ..!!

4) வாழ்வில் சின்ன
சின்னவிஷயத்திற்கெல்லாம்கோபப்படாதே... சந்தோஷம்
 குறைவதற்கும்,
பிரிவினைக்கு்இதுவே
முதல் காரணம்...!!

5)உனக்குஉண்மையாகஇருப்பவர்களிடம்...நீயும் உண்மையாய்
  இரு...!!

6) அடுத்தவர்களுக்கு
  தீங்கு செய்யும் போது
  இனிமையாகத்தான் இருக்கும்...அதுவே உனக்கு வரும் போது தான், அதன் வலியும் வேதனையும புரியும்...!!

7)ஒருவன்துரோகி
என்று தெரிந்துவிட்டால்...
 அவனை விட்டு
 விலகியே இரு...!!

8)எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!

9) நீ கோவிலுக்கு
      சென்று தான்
      புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
  சென்றதற்கு சமம்...!!

10)நிறை குறை
      இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை
      மட்டும்
      நினை..!!

11)எவன் உனக்கு
       உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!

12)அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று நினைக்காதே...
      நம்மை விட 
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!

13)பிறப்பிற்கும்
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே..

வாழ்க                வளமாக!👌
நாளும்               நலமாக!🤝
என்றும்                எழுச்சியாக.!😇
சாந்தியும் சமாதானமாக!🤝
அன்பும்     அமைதியுமாக!💓
ஆரோக்கியமும் ஆனந்தமுமாக!
இன்றும்        இனிமையாக.👨‍👩‍👧‍👦

No comments: